Thunai
துணை
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே...
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே...
-செய்யுள் 70, கந்தர் அலங்காரம், அருணகிரிநாதர்.
Arunagirinathar & Murugapperumaan
பல்லவி: மனதிற்குகந்தது முருகன் ரூபம்
மாயை நீக்குவது அவன் திருநாமம்
மாயை நீக்குவது அவன் திருநாமம்
அனுபல்லவி: தினமும் காப்பது அவன் கைவேல்
தீரா வினையையும் தீர்க்கும் கதிர்வேல் (மனதிற்குகந்தது)
சரணம்: எண்ணும் எண்ணமெல்லாம் நிறைவேறும்
பண்ணும் பூஜையினால் பலன் உண்டாகும்
மண்ணில் நாம் படும் துயர் தீரும்
மாறா இன்பம் மனதினில் சேரும் (மனதிற்குகந்தது)
- சிந்து பைரவி ராகம், ஆதி தாளம், தஞ்சாவூர் சங்கர ஐயர். His photo, below.